இலங்கையில் திருநங்கைகள் விடயத்திலும் பாரபட்சம் காட்டப்படுவதாக அமெரிக்காவை தளமாகக்கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
பாலின அடிப்படையிலும், பாலுணர்வின் அடிப்படையிலும் இலங்கையில் குறித்த திருநங்கைகள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர்.
பலவந்தம், தொழில்வாய்ப்பில் முன்னுரிமையின்மை உட்பட்ட விடயங்களில் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.