திருமணத்தால் தங்கையை கொலை செய்த அண்ணன்

137

 

திரு­மணம் செய்து வைத்தால் பணம் செல­வாகும் என்­பதால் அண்ணன் ஒருவர் தங்­கையை கொலை செய்த சம்­ப­வ­மொன்று டில்­லியில் இடம்­பெற்­றுள்­ளது. டில்­லியின் கிழக்குப் பகு­தி­யி­லுள்ள ஹசன்­பூரைச் சேர்ந்­தவர் லாக்கி என்­பவர் தனது மனைவி, மகன், மரு­மகள் மற்றும் வளர்ப்பு மகள் சித்­ரா­வுடன் வாழ்ந்து வந்­துள்ளார்.

கல்­வியில் தேர்ச்சி காட்­டி­னாலும் சித்­ரா­விற்கு திரு­மணம் செய்து வைக்க வேண்டும் என்ற கவலை லாக்­கியை வாட்டி எடுத்துக் கொண்­டி­ருந்­தது.மகன் திரு­ம­ண­மாகி குடும்­பத்­துடன் வாழ்ந்து வரும் நிலையில் மகள் சித்­ரா­வுக்கு திரு­மணம் செய்து வைக்­க­வேண்­டு­மென மகன் தப­ஸிடம் தந்தை தெரிவித்­துள்ளார்.

இந்­நி­லையில், கடந்த திங்­க­ளன்று சித்ரா தனது வீட்டில் மர்­ம­மான முறையில் இறந்து கிடந்­துள்ளார். இதனால் அதிர்ச்­சி­
ய­டைந்த லாக்கி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். பொலிஸார் சித்­ரா வின் மரணம் குறித்து தீவிர விசா­ரணை நடத்­தி­யதில், சித்­ரா ­வினைக் கொலை செய்­தது லாக்­கியின் மகன் தபஸ் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து பொலிஸார் தபஸை கைது செய்து நடத்­திய விசா­ர­ணையில், குடும்­பத்தில் தான் மட்­டுமே உழைப்­ப­தா­கவும், தனது குடும்­பத்தில் சித்ரா ஒரு சுமை­யாக இருந்­த­தா­கவும், சித்­ராவின் திரு­ம­ணத்­துக்­கான பணத்தை எப்­படித் திரட்­டு­வது என்­பது குறித்து தனது தந்தை கடும் கவலை கொண்­டி­ருந்­த­தா­கவும் கூறி­யுள்ளார்.

மேலும், தனது மனை­வி­யுடன் தினமும் சண்­டை­யிட்டு வந்­த­தா­கவும் கூறி­யுள்ளார்.இதனால், சித்­ராவை தீர்த்துக் கட்­டினால் இந்தப் பிரச்­சினை எல்லாம் தீர்ந்­து­விடும் என்று நினைத்த தபஸ் கடந்த திங்கட்கிழமை மாலை வீட்டில் தனியே இருந்த சித்­ராவை கழுத்தை நெறித்துக் கொலை செய்­த­தா­கவும், தன் மீது சந்­தேகம் வராமல் இருப்­ப­தற்­காக, சித்­ராவின் மரணம் குறித்து பொலிஸார் விசா­ரணை நடத்த வேண்­டு­மென ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­தா­கவும் தபஸ் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

செலவைக் குறைப்­ப­தற்­காக அண்ணன் தங்­கையை கொலை செய்த சம்­பவம் டில்­லியில் அதிர்­ச்சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

SHARE