திருமணத்தை எப்படி நடத்த வேண்டும்..? அறிவுள்ள ஆண்மகனின் வைராக்கியம்: கண்டிப்பாக படியுங்கள்

186

திருமணம் எப்படி நடத்தினால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், என்பதை பற்றி தான் இந்த பதிவு கண்டிப்பாக படியுங்கள்.

ஆண்களுக்கோ, பெண்களுக்கோ திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்து வைக்கபோகிறோம் என்று பெற்றோர் சந்தோஷப்படாமல் அதற்குரிய செலவை பற்றி அதிகமாக கவலைப்பட தான் செய்கிறார்கள்.

அதிலும், பெண்ணின் பெற்றோர்கள் என்றால் நொந்து போய் விடுகிறார்கள். காரணம், அவள் திருமணத்திற்கு தங்க நகைகள், வீட்டு உபயோக சீர்வரிசை பொருட்கள், மாப்பிள்ளைக்கு தங்க நகைகள், பைக், கார் ஆகியவை வாங்கித்தரவேண்டும்.

இதனால், தான் பெண் குழந்தை வயிற்றில் இருப்பது தெரிந்ததும் அவளை கருவிலேயே கொல்லவேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு தோன்றுகிறது.

சரி, ஆண் குழந்தை பெற்றவர்களுக்கு திருமணத்தினால் வரவாக தானே இருக்கிறது என்று நினைக்கிறோம்.

அது தான் இல்லை, பெரும்பாலும் திருமணத்தை நடத்துவது மாப்பிள்ளை வீட்டாராகத்தான் இருக்கிறார்கள். வரவு இருந்தாலும் செலவும் இருக்கத்தானே செய்கிறது, அவற்றிக்கும் பணம் தேவை அல்லவா?

சரி, பெற்றோர்கள் மட்டும் தான் கவலைப்படுகிறார்களா? உறவினர்கள், அக்கம் பக்கத்தினருக்கும் அப்படித் தான்.. காரணம், அவர்களும் திருமணத்தின் போது மொய் பணம் வைக்கவேண்டுமே.

பணம் இருப்பவன் ஆடம்பரமாக திருமணம் செய்வதை பார்த்து, கௌரவத்திற்காக நாமும் அதே போல் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்து பணத்தை மற்றவரிடம் வட்டிக்கு கடன் வாங்கி திருமணம் செய்கிறார்கள், பிறகு திருமண கடனை அடைப்பதற்காக குழந்தை பெறுவதை கூட தள்ளிவைக்கிறார்கள் அல்லது திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் அந்த திருமண கடனுக்கான வட்டியை கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அசலை அடைத்தபாடேயில்லை.

அதற்கு பதிலாக அந்த பணத்தை வைத்து ஒரு தொழில் தொடங்கியிருந்தால் அசலையும் அடைத்திருப்பார்கள், லாபத்தையும் பெற்றிருப்பார்கள். மணமக்களும் சந்தோஷமாக வாழ்ந்து இருப்பார்கள், அதை விட்டுவிட்டு திருமணத்தை ஆடம்பரமாக செய்து விட்டு குழந்தைகள் பிறந்த பிறகும் வட்டியை கட்டுவார்களா இல்லை குழந்தையை சந்தோஷமாக வளர்ப்பார்களா? எதற்காக இந்த ஆடம்பர திருமணம். தாலி கட்டப்போகும் அந்த இரண்டு முன்று நிமிடத்திற்காக பல லட்சங்களை எதற்காக வீணாக்க வேண்டும்? சிந்தித்து பாருங்கள்!

பின்பு திருமணத்தை எப்படி தான் நடத்துவது?

  • தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணை காப்பாற்றுவது ஆணின் கடமை, அதனால் தன் வருமானத்திற்கு ஏற்றவாறு நகையும், புடவையும் வாங்கிக்கொடுத்து அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும்,
  • திருமணத்தை அரசு திருமணப்பதிவு அலுவலகத்தில் செய்து பின்பு தன் வீட்டில் நெருங்கிய உறவினார்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை அழைத்து விருந்து அளித்து திருமண செய்தியை மகிழ்ச்சியுடன் கூறி அவர்களை வழி அனுப்பி திருமண வாழ்வை துவங்குவது சிறந்தது, சிலருக்கு வீட்டில் விருந்து அளிக்க இடப்பற்றாக்குறை இருப்பவர்கள், சமுதாயக்கூடத்தில் விருந்தை அளிக்கலாம், இந்த திருமணத்தை நடத்த மிகக்குறைந்த செலவே ஆகும்.
  • உங்களால் முடிந்தால் ஆதரவற்றவர்களுக்கோ, மாற்றுத்திறனாளிகளுக்கோ உணவளியுங்கள், அது அவர்களுக்கு நீங்கள் ஒரு வேளை உணவு அளித்தோம் என்கிற மனநிறைவு கிடைக்கும்.
  • இப்படி திருமணத்தை நடத்தி முடித்து திருமண வாழ்க்கையை துவங்கினால் வட்டியும் அசலும் கட்ட வேண்டும் என்று புலம்பிக்கொண்டு வாழ்க்கை நடத்த தேவையில்லை. தங்களை சுற்றி உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் செலவு வைக்கபோவதும் இல்லை. அவர்களும் மனதார வாழ்த்திவிட்டு செல்வார்கள்.

தாம்பூலப்பூபை தான் கொடுக்க வேண்டுமா?

திருமணத்திற்கு வருபவர்களுக்கு தாம்பூலப்பை தான் கொடுக்க வேண்டுமா நமது திருமணம் மற்றவர்கள் மனதில் நினைவு கொள்ளத்தான் இந்த பைகளை கொடுக்கிறோம். அதற்கு மாற்றாக மரக்கன்றுகளை பரிசாக தரலாம். நல்ல சிந்தனைகளை தூண்டும் புத்தகங்களை தரலாம். இதனால் இயற்கையும் வளரும், இறைவன் தந்த அறிவும் வளரும்.

இப்படி திருமணம் நடத்தினால் திருமண வாழ்வு மகிழ்ச்சியாகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிக்கவும் செய்யலாம்.

பணம் வைத்திருப்பவன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதை பார்த்து தான். இல்லாதவன் தானும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறான், ஆகையால் இருப்பவன் எளிமையாக திருமணத்தை நடத்தினால் இல்லாதவனும் எளிமையாக நடத்துவான். இருப்பவனின் ஆடம்பரம் இல்லாதவனுக்கு அத்தியாவசியமாக மாறிவிடுகிறது.

ஏன் எளிமையாக நடத்துகிறீர்கள், ஆடம்பரமாக நடத்துங்களேன் என்று உங்களிடம் மற்றவர்கள் கேட்டால், அவர்களை பார்த்து நீங்கள் என் திருமணத்திற்கு 5 லட்சம் ரூபாய் இனாமாக கொடுங்களேன் என்று கேளுங்கள், அப்பொழுது அவர்களுக்கு பணத்தின் அருமை தெரியும்.

என் திருமணம் இப்படித்தான் நடக்கும்.

 

SHARE