மாகாண சபை உறுப்பினர்களும் , மாகாண அமைச்சர்களும் வெளிநாட்டு விஜயத்தின் போது அடுத்த வருடம் தொடக்கம் திறைசேரியின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றினூடாக ஜனாதிபதி ஊடப் பிருவி இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த வருடத்தின் எதிர்வரும் மாதங்களில் மாகாண சபை பிரதிநிதிகள் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டாலும் கட்டாயம் திறைசேரியின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச நிதியில் நாட்டிலுள்ள அனைத்து மாகாண சபை பிரதிநிதிகளும் கடந்த 20 வருடங்களாக வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது மத்திய மாகாணத்தின் குழுவொன்று வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மாகாண சபையின் உறுப்பினர்களின் வெளிநாட்டு விஜயத்திற்கு பாரிய அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.