தியாகத் தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள திலீபனின் நினைவுத் தூபியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பல அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள குறித்த நிகழ்வுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மாவை சேனாதிராஜா 9 மணியளவில் வருகைத் தந்துள்ளார்.
இதன்போது திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தி, தீபம் ஏற்றி வைத்து விட்டு 10 நிமிடங்களில் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.