தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் காதல் திருமண தேதி அறிவிப்பு

186

பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்களான தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம் அடுத்த மாதம் நடைபெறும் என்றும் அதற்கான தேதியை அவர்கள் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் விழாக்களுக்கு ஒன்றாக வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

பத்மாவத் படத்துக்குப் பின்னர் அவர்களுடைய நெருக்கம் அதிகமாகிவிட்டது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே இவ்வாண்டு இறுதிக்கு இருவரும் திருமணம் செய்துக்கொள்ளலாம் எனவும் தகவல்கள் வெளியாகியது. இருவீட்டாரும் திருமண வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இப்போது இருவர் தரப்பிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமணம் நவம்பரில் நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

திருமண அழைப்பிதழ் வடிவில் அவர் வெளியிட்டுள்ள தகவலில் ‘எங்கள் குடும்பத்தாரின் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நவம்பர் 14, 15 தேதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இத்தனை காலமாக எங்கள் மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த வாழ்க்கை தொடங்கப்போகும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.<

SHARE