சாய்ந்தமருது அல் – அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள கடற்கரைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 11.45 மணியளவில் நடந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கல்முனை மாநகரசபையின் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளதுடன், படகுக்கு அருகாமையில் இருக்கின்ற மரங்கள் மற்றும் மின்கம்பிகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இப்படகு கடந்த சில மாதங்களாக பழுதடைந்த நிலையிலேயே திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.