வவுனியா போகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ரி-56 துப்பாக்கிக்கான 750 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போகஸ்வெவ பகுதியில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு அண்மையில் அலுவலக பணியாளர்கள் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து போகஸ்வெவ பகுதியில் உள்ள பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு குறித்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை போகஸ்வெவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.