இரவு சாப்பிட்டு முடித்த பின்னர் தூங்க செல்லும்போது சிலருக்கு பசி வயிற்றை கிள்ளும். அதற்கு காரணம், இரவில் தவிர்க்கவேண்டிய உணவுகளை சாப்பிடுவதே ஆகும். சிலர் பசிக்கிறது என்பதற்காக நொறுக்கு தீனிகளை சாப்பிடுவார்கள்.
ஆனால், இதனை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நொறுக்கு தீனிகள் செரிமானப்பிரச்சனைகளை ஏற்படுத்தி இரவு தூக்கத்தை கெடுத்துவிடும். எனவே இரவில் சாப்பிட்ட பின்பும் பசி எடுக்கும் போது, நொறுக்கு தீனிகளை தவிர்த்து சத்துக்கள் நிறைந்த மற்றும் உடம்பிற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் வகையான உணவுகளை உண்பது நல்லது.
இரவில் தூங்கும் முன் பசித்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சத்துள்ள உணவு பொருள்களை எடுத்துக் கொள்ளலாம்.
கார்ன் மற்றும் ஓட்ஸை ஒரு கப் எடுத்து பாலில் கலந்து, சர்க்கரை சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிட வேண்டும். இதில், கார்போஹைட்ரேட் நிறைந்து இருப்பதால் இரவில் பசி ஏற்படாமல், நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற முடிகிறது.
ட்ரிப்டோஃபேன்கள் நிறைந்த தயிரை எடுத்துக் கொள்ளலாம். இரவில் ஒரு கப் தயிர் குடித்தால் வயிற்றில் ஏற்படும் பசியை போக்கி, வயிறும் நிறைந்தது போல காணப்படும்.
பின்பு, அதிகளவு புரோட்டின்கள் மற்றும் மினரல் சத்துகள் உடைய மீன்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் கொழுப்புகள் இல்லாததால் எளிதில் ஜீரணம் செய்து, நல்ல உறக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால், இரவு நேரங்களில் வறுத்த மீன்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அது அஜீரணத்தை ஏற்படுத்தும்.
– See more at: http://www.manithan.com/news/20161128123086#sthash.F3qr6X5I.dpuf