தூய கடற்கரை – 2016 வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய கடற்கரை மற்றும் கடல்வளங்களின் பாதுகாப்பு வாரமும் கரையோர தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் இன்று திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை இதனை அமுல் படுத்தி வருகின்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் N.A.A புஸ்பகுமார பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் முப்படை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பாடசாலை சமூகம், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன் போது திருகோணமலை வைத்தியசாலையை அண்மித்த கடற்கரை பகுதியில் இருந்து ஜமாலியா வரையிலான கடற்கரைப்பகுதிகளில் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டது.