தென் ஆப்பிரிக்காவை தோற்கடிப்போம்: முரளி விஜய்

234
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறோம் என இந்திய அணியின் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய் கூறியதாவது, கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர்.

இதேபோன்று இனிவரும் போட்டிகளிலும் நெருக்கடி கொடுக்கும் பட்சத்தில், அதை சமாளிக்க எல்லா வகையிலும் தென் ஆப்பிரிக்கா முயற்சி செய்யும், எனவே போட்டி மிக கடுமையாக இருக்கும்.

அதேவேளை துடுப்பாட்ட வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர், நானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தருவேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நாங்கள் அதற்கேற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும், இனிவரும் ஆட்டங்களில் நன்றாக விளையாடுவோம் எனவும் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.

SHARE