
தெற்காசியாவிலேயே மிகப் மிகப்பெரிய கொடியை ஏற்றி தனது 70-வது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை ஓட்டி இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா எல்லையில் 120 அடி நீளமும் 180 அடி அகலமும் கொண்ட பாகிஸ்தானின் தேசியக் கொடி, 400 அடி உயரம் கொண்ட கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
இதன் மூலம் தெற்காசியாவின் மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்றிய பெருமை பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் இராணுவத் தரப்பில், “உலகளவில் இது எட்டாவது மிகப்பெரிய கொடி”என்று கூறப்பட்டுள்ளது.