சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேல் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாகவும், சுமார் மூன்று கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் தாம் வாகன நெரிசல் காரணமாக காத்திருக்க நேர்ந்ததாக, நுழைவாயிலுக்கு வெளியில் வரும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
தெற்கு அதிவேக வீதியிலிருந்து வெளியேறுவதற்கு மாற்று நுழைவாயில்களை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக பாதையின் வாகன நெரிசல் நீங்கியது
தெற்கு அதிவேக பாதையின் மாத்தறை – கொடகம இடையில் உள்ள குறுக்கு வீதியில் ஏற்பட்ட வாகன நெரிசல் தற்போது நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன சாரதிகள் வழமை போல் இந்த பாதையில் பயணிக்கலாம் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.