தெற்கு பகுதியில் காற்று சுழற்சி: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

107

 

தெற்காக காற்று சுழற்சியொன்று மையம் கொண்டுள்ளதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது, தற்போது இலங்கையின் தெற்காக மையம் கொண்டுள்ளதால் இன்றும் (10.01.2024) மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காற்று சுழற்சி, மாலைதீவு கடற் பிராந்தியம் நோக்கி மேற்கு திசையில் நகர்வதன் காரணத்தினால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

SHARE