தேங்காய் பாலின் மருத்துவ குணங்கள்!

285

இரசாயனத்தை பயன்படுத்தி முடியை நேராக்கியவர்கள் மற்றும் இயற்கை முடி உடையவர்களுக்கும் கூட, முடி நன்றாக வளரவும், உறுதியாக இருக்கவும் ஈரப்பதம் அவசியம் அல்லவா?

அதற்கு உறுதுணையாக இருக்கிறது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

பெண்களின் சமையலறை ஆகட்டும் அல்லது அலங்கார பொருட்கள் ஆகட்டும் அல்லது மருந்து பெட்டி ஆகட்டும், இவை அனைத்திலும் ஏதாவது ஒரு ரூபத்தில் தேங்காய் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

பெண்களுக்கு சமையலில் பயன்படுத்த அரைத்த தேங்காய் அல்லது தேங்காய் பால் பயன்படுகிறது. மேலும் தலைக்கு தேய்க்க எண்ணெய் வடிவமாகவும் பயன்படுகிறது.

முடி

தேங்காய்ப்பாலை ஸ்கால்ப்பில் படுமாறு தேய்த்து குளித்து வர உடலுக்கு குளிர்ச்சி கிடைப்பதோடு மட்டுமல்லாமல் முடிக்கு தேவையான இயற்கையான போஷாக்கு கிடைத்து முடி உதிர்வு குறைந்து மென்மையான கூந்தல் கிடைக்கும்.

உறுதியான எலும்புகளுக்கு

தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது உடலில் பாஸ்பேட் கலப்பதால், எலும்பு உருக்குதல் தடுக்கப்படுகிறது.

நீரழிவு நோயிலிருந்து தடுக்க

உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் போன்றவற்றிலும் அதிக அளவு மாங்கனீசு அடங்கியுள்ளது.

ஒல்லியான உடலை பெற

தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். உடல் எடையை குறைக்க முற்படுபவர்களுக்கு, கண்டிப்பாக இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும் தன்மை கொண்டது.

SHARE