மாத்தளை – வில்கமுவ பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமா முறையைச் சேர்ந்தவர் எனவும், இவரை திங்கட்கிழமை கைது செய்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் எப்பாவெல பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கு தேங்காய் விற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமி வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்து கொண்ட நபர் அவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட 9 வயதான சிறுமி ஹெட்டிப்பொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை நாவுல நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.