தேசத்தை எல்லா சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கத் தயார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
அனைத்து படையினரும் நாட்டுக்கு விசுவாசமாகவும், தொழில்சார் ஒழுக்க நெறிகளுடனும் இருக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
இலங்கைப் படையினரின் மனிதாபிமானம், தொழில்சார் ஒழுக்கம், நேர்மை, ஒழுக்கம் போன்றவற்றில் உலக அளவில் சிறந்து விளங்குகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விடயங்கள் சர்வதேச அமைதி காக்கும் பணிகளின் போது எமது படையினருக்கு கூடுதல் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு படையினர் ஆற்றிய சேவை பெருமிதம் அடையச் செய்யும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.