தேசியத்தலைவர் என்று கூறுகின்ற ஒரேயொரு தலைவர் தான் இருந்திருக்கிறார், அது வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும் தான், அதற்கு முன்பும் அப்படி ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை, அதற்கு பின்னும் என்னுமொரு தேசியத்தலைவர் உருவாகப் போவதில்லை என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ் மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற யாழ் மாவட்ட தமிழரசு கட்சின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.
தமிழ் தேசிய இனத்தினை பொறுத்தவரையில் தமிழ் தேசிய இனத்தின் தலைவராக ஆரம்பத்திலிருந்து தந்தை செல்வா இருந்து வந்திருக்கிறார்.
அதற்கு பின்னால் இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இலங்கை தமிழரசு கட்சியின் உயர் தலைவராகவும் இருக்கின்ற சம்பந்தன் அவர்களே தமிழ் தேசிய இனத்தின் தலைவராக இருக்கிறார்.
தமிழ் தேசியம் என்று பேசுகின்ற நாங்கள் எல்லோரும் தேசியத்தலைவர் என்று கூறுகின்ற ஒரேயொரு தலைவர் தான் இருந்திருக்கிறார் அது வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும் தான் அதற்கு முன்பும் அப்படி ஒரு தேசியத்தலைவர் இருந்ததில்லை அதற்கு பின்னும் என்னுமொரு தேசியத்தலைவர் உருவாக போவதில்லை என்பது எங்களுடைய தெளிவான நிலைப்பாடு.
பிரபாகரனுக்கு பின்னும் முன்னும் பிரபாகரன் மட்டும் தான் தேசியத்தலைவர்.
பிராந்தியங்களின் ஒன்றியம் என்பது சந்திரிகாவின் அரசியல் தீர்வு முன்மொழிவுகளில் உள்ளடக்கப்பட்ட விடயம். அதனை ஆங்கிலத்தில் union of regions என்று சொல்லப்பட்டு இருக்கிறது unitery state என்று சொல்லுகின்ற ஒற்றையாட்சி முறையிலிருந்து மாறுபட்டு அது ஏற்றுகொள்ளதா முறைமையை கொண்டு வருவதற்காகதான் union of regions என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
regions என்பது எங்களை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் தான் அது பிழையான விடயம் அல்ல, அதுக்கும் ஒருவிதமான சமஸ்டி அமைப்பு தான், அது தான் எங்களுடைய முடிவான முடிவாக நாங்கள் கருதவில்லை என்றார்.