தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமையானது நாட்டின் புதிய பயணத்திற்கான ஆரம்பம் என அரச கைத்தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் ஏரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் செய்துள்ள பதிவில் பிரதியமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை செய்துள்ள அமைச்சர் மனோ கணேசன், தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமையாது நல்லிணக்கத்தின் சிறிய செயற்பாடு எனவும் மேலும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே பல வருடங்களுக்கு பின்னர் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டதை கேட்க முடிந்ததாக பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.