தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி சாதனை!

154

தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி மூன்றாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ். மணல்காடு றோமன் கத்தோலிக்கன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த தோ.சுவகர்ணசீலி எனும் மாணவியே 17வயது பெண்கள் பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளார்.

கண்டி பிலிமத்தலாவ விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியின் போது இம்மாணவி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)

SHARE