தேசிய விருது பெற்றவரின் குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலைமையா?

219

தேசிய விருது பெற்றவரின் குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலைமையா? - Cineulagam

சினிமாவில் பல வகையில் சாதித்தாலும் அவர்களின் குடும்ப நிலை மிகவும் மோசமாக தான் இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் என்றால் அது எடிட்டர் கிஷோரின் குடும்பம். வெற்றி மாறன் இயக்கியஆடுகளம் படத்திற்காகவும், தற்போது விசாரணை படத்திற்காகவும் சிறந்த எடிட்டர் என்று தேசிய விருது பெற்றுள்ளார்.

இவரின் மறைவுக்கு பின் இவரது குடும்பம் பெறும் கஷ்டத்தில் உள்ளனராம். இதுகுறித்து அவருடைய தந்தை கூறுகையில், தற்போது கடையை என்னால் பார்க்க முடியாத சூழலில் அந்தக்கடையை வாடகைக்கு விட்டுள்ளேன். இப்போது ஒரே பிள்ளையையும் இழந்து நிற்கிறோம் நாங்கள். டிவியில் அவன் பெயரோடு வரும் அறிவிப்புகளை பார்த்து என்னை விட என் மனைவி கலங்கி நிற்கிறாள். 73 வயதில் பல இன்னல்களை சந்தித்து வருகிறேன்.

சினிமா துறையினர் எங்களை மறந்து விட்டனர். எங்களுக்காக எதுவும் செய்யவில்லை, என் மகன் இறந்த பிறகு இந்த விருது அறிவிப்பு வந்துள்ளது. ஆனால் அந்த விருதை வாங்க கூட முடியாமல் என் மகன் இறப்பு நினைவுபடுத்துகிறது என்று தேம்பி தேம்பி அழுதுள்ளார்.

SHARE