தேனிலவுக்கு சென்ற புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி

104

அவுஸ்திரேலியாவை சேர்ந்த புதுமண தம்பதி அமெரிக்காவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் மனைவிக்கு பக்கவாதம் ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோசப் (28) மற்றும் பிரான்செஸ்கா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் அமெரிக்காவுக்கு தேனிலவு சென்றனர்.

தேனிலவுக்கு சென்ற இரண்டாவது நாள் ஹொட்டலில் இருந்த ஜிம்மில் பிரான்செஸ்கா சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து அதிர்ச்சியில் உறைந்த அவரின் கணவர் ஜோசப் உடனடியாக மனைவியை மருத்துவமனையில் சேர்த்தார்.

அப்போது தான் பிரான்செஸ்காவுக்கு கடுமையான பக்கவாதம் தொடர்ந்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இதன்பின்னர் அவருக்கு மூன்று அறுவை சிகிச்சை நடந்தது.

இது குறித்து ஜோசப் கூறுகையில், பிரான்செஸ்காவின் நிலை வேதனையளிக்கிறது.

பிரான்செஸ்கா மூளையின் அழுத்தத்தை குறைக்க மருத்துவர்கள் அவர் மண்டையோட்டின் பகுதியை தற்காலிகமாக நீக்கவுள்ளனர்.

தற்போது உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இதனிடையில், நல்ல ஆரோக்கியமாக இருந்த பிரான்செஸ்காவுக்கு இந்த நோய் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பதை மருத்துவர்களாலேயே சரியாக கண்டுப்பிடிக்க முடியவில்லை.

 

SHARE