தேர்தலுக்கான பிரசாரம், நாளை இரவுடன் முடிவடையஇ ருக்கின்ற நிலையில், மிகவும் விறுவிறுப்பான கட்டத்தினை அடைந்துள்ளது தேர்தல் களம்.

346

 

தேர்தலுக்கான பிரசாரம், நாளை இரவுடன் முடிவடையஇ ருக்கின்ற நிலையில், மிகவும் விறுவிறுப்பான கட்டத்தினை அடைந்துள்ளது தேர்தல் களம்.

SAMSUNG CAMERA PICTURES

இன்னும், தேர்தலுக்கு நான்கு நாட்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் தேர்தல் பிரசாரங்கள் இரவு, பகல் பாராமல் முழு நீளத்தில் முடக்கி விடப்பட்டிருக்கின்றன.

இதுவரையில், இலங்கையில் நடைப்பெற்ற தேர்தல்களை வைத்துப் பார்க்கும்பொழுது, மிகவும் ஜனநாயகமான முறையிலும், அதேவேளை தேசத்தின் அழகுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், மக்களின் பொதுச்சொத்துக்கள் மற்றும் அரச சொத்துக்கள் என்பன பாதிப்படையாதவாறு, தேர்தல் நடைபெறப் போகும் சூழலை ஏற்படுத்திய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிற்கும் மனம் திறந்து நன்றி கூறலாம்.

இது எமது தேசத்திற்கு கிடைத்த வெற்றி. ஜனாதிபதி மைத்திரியின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றி, மகிந்த தேசப்பிரியவிற்கு கிடைத்த வெற்றி என்றே அடையாளப்படுத்தலாம். இத்தேர்தலின் உறுதித்தன்மையினை காக்கும் பொருட்டு பல்வேறு முயற்சிகள் இம்முறை எடுக்கப்பட்டுள்ளன.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

அவ்வாறாக, முதலில் இதில் பாராட்ட வேண்டிய விடயம் என்னவென்றால், இத்தேர்தலை கண்காணிப்பதற்காக தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் கண்காணிப்பாளர்கள் 29 பேரைக் கொண்ட குழு இலங்கைக்கு வருகை தந்தமையினை அடையாளம் செய்யலாம்.

இதுதவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவினர் ஏற்கனவே இலங்கை வந்து சகல மாவட்டங்களிலும் தமது கண்காணிப்பு ப்பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறாக இப்பொதுத் தேர்தலுக்காக, இதுவரையில் மகிந்த தேசப்பிரிய முன்னெடுத்த பலவிடயங்கள் இவ்விடத்தில் சுட்டிகாட்டுவது பொருத்தமானதாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை, மக்கள் மத்தியில், தேர்தல் முடிவுகள் நீதியான முறையில் வெளிவருமா? என்ற சந்தேகம் ஓரளவு இருந்ததனை மறுக்க முடியாது.

ஆனால் அவற்றை கடந்து, தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின் தலைமைத்துவ ம்எல்லாவற்றையும் தகர்த்தெரிந்து வெற்றி கண்டது. தேர்தல் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் இருந்த சந்தேகத்தினை முற்றிலுமாக இல்லாமல்செய்தது.

அதனைப்போல, இத்தேர்தலிலும் மேற்கொள்ளப்பட்ட பல விடயங்கள் மிக உன்னதமாக பாராட்டபட்ட வேண்டிய அளவிற்கு காணப்படுகின்றது.

குறிப்பாக, பொதுத் தேர்தலுக்கு இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில், பிரசாரங்களுக்காக இன்றிரவு ஏழுமணிக்குப் பிறகு, வீடுவீடாகச் செல்வதை தடைசெய்துள்ளது.

வீணான குழப்பங்கள் இதன்மூலம் தவிர்க்கப்படுகின்றன. விருப்புவாக்குத் தொடர்பான சர்ச்சைகளை தடுக்க புதிய நடைமுறையொன்று இத்தேர்தலில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.  எதிர்வரும் 18ம் திகதி வரையில் அரசநிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய செயல்கள் ஜனநாயகத்  தேர்தலின் அடையாளங்களாக காணப்படுகின்றது.

எதிர்வரும், நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரையில் வேட்பாளர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவித்தமையானது ஒரு சிறப்பான அம்சமாகும்.

தேர்தல் காலங்களில் இவை தவிர்க்கப்படுகின்றமையானது, மக்கள் வீணாக குழம்புவதனை குறைக்கும்.

அதேவேளை, தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுபானம் வழங்குவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனஅ றிவித்தமையானது முற்றிலும் பாராட்டப்பட வேண்டியது.

குறிப்பாக மலையக அரசியல்வாதிகளின் போக்கு இதன் மூலம் மாற்றப்படும் எனஎதிர்பார்க்கலாம். மேலும், நாட்டின் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கைது செய்ய தடையில்லை என கூறியமையானது அரசியல் வாதிகளின் குற்றங்கள் வெளிவரக்கூடிய சூழலைஏ ற்படுத்தும் எனக் கருதலாம்.

அதனுடன், எதிர்வரும் 17ம் திகதிந டைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, நாடு முழுவதிலும் 12399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் இவற்றுக்கு எதிர்வரும் 16 மற்றும் 17ம்திகதிகளில் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட உள்ளது.

மேலும், தேர்தல் கடமைகளுக்காக 71000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப் படவுள்ளமையானதும் சிறப்பான அம்சமாகும்.

கடந்த 11ம் திகதி, நண்பகலுக்கு முன்னர் தமது உத்தியோக பூர்வ வாகனங்களை கையளிக்காத பிரதியமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவிட்டமை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தடை விதித்துள்ளமை போன்றவை ஜனநாயகத் தேர்தலை உறுதிப்படுத்துகின்றன.

மேலும் லொத்தர் சீட்டிழுப்புகளை நடத்தி, பரிசுகளை வழங்கி வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக அழுத்தங்களை கொடுத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகக் கூடும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்தமை, வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட அரச வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை விதிக்கப்பட்டமை போன்றவையம் சிறப்பானவைகளாகும்.

அமைச்சர்களுக்கு வாடகை அடிப்படையில் அரச வாகனங்களைப் பெற்றுக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டமை மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேசியப்பட்டியலில் பெயரில்லாதவர்கள் எவருக்கும் எம்.பி. பதவிகள் வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள்ஆணையாளர் அறிவித்தமைபோன்ற செயல்கள் அனைவராலும் வெகுவாக கவரப்பட்ட அம்சங்களாகும்.

மேலும், தேர்தலின் உறுதித் தன்மையினை காக்கும் பொருட்டு 011 2877631 , 011 2887756, 011 2887759 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து, தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்தமையினையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியது முக்கியமாகும்.

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாதவாறு பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசியல்வாதிகளிடமும் ஆதரவாளர்களிடமும் கேட்டுக்கொண்ட விடயமும் சிறப்பான அம்சமாகும்.

மேலும் துண்டுப் பிரசுர விநியோகத்திற்கும் புதிய கட்டுபாடுகளை விதித்தமையினையும் இவ்விடத்தில் அடையாளப்படுத்தலாம் .இதனைப் போல பல விடயங்கள் இதில் உள்ளடங்கும்.

இவ்வாறாக தேர்தல் திணைக்களத்தினாலும், தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசிப்பிரியவினாலும் மற்றும் காவல்துறை, இராணுவம், ஜனாதிபதிபோன்ற அனைவரினது ஒத்துழைப்பின் பிரகாரம் இப்பொது தேர்தல் சுதந்திரமான முறையிலும்,  நீதியான முறையிலும் நடைபெறப்போகின்றது என்ற மக்களின்எ திர்பார்பினை முழுமையாக இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

SHARE