தேர்தல் குறித்த கேள்விக்கு கோபத்துடன் சர்ச்சையான பதில் கூறிய கமல்ஹாசன்

258

தேர்தல் குறித்த கேள்விக்கு கோபத்துடன் சர்ச்சையான பதில் கூறிய கமல்ஹாசன் - Cineulagam

கமல்ஹாசன் இன்று தன் புதிய படத்தின் பணிகளை தொடங்கினார். இப்படத்திற்கு சபாஷ் நாயுடு என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். பூஜைக்கு பிறகு பத்திரிக்கையாளரை சந்தித்த கமலிடம், தேர்தல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதில் இவர் பேசுகையில் ‘இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்க மாட்டேன் . ஏனென்றால், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சாவடிக்கு போனபோது என் வாக்கினை வேறு யாரோ போட்டுள்ளார்.

இந்த முறை வாக்களிப்பதற்காக கேட்டேன். வாக்காளர் பட்டியலில் என் பெயரையே இல்லையாம். மேலும், தேர்தல் கமிஷன் அதிகாரி என் நெருங்கிய நண்பர். அப்படி இருந்தும் என்ன செய்வது?’ என கோபமாக பதில் அளித்துள்ளார்.

SHARE