தேர்தல் முடிவு குறித்து நமீதா வெளியிட்ட அறிக்கை

252

தேர்தல் முடிவு குறித்து நமீதா வெளியிட்ட அறிக்கை - Cineulagam

தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவு நேற்று வெளிவந்தது.

மீண்டும் ஜெயலலிதாவே முதலமைச்சர் ஆனார். இதற்கு நடிகை நமீதா வாழ்த்துக்கள் கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் ‘புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது.

இது அம்மாவின் நிர்வாக திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் தினமும் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது.

இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது, வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார்.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள்’ என இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

SHARE