(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக அகழ்வுபணி அடையாளப்படுத்தும் பணி அப்புறபடுத்தும் பணி என பல்வோறுகட்ட செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.
தொடர்சியாக சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றது. இன்றுடன் 69 வது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன.
விசேட சட்ட வைத்திய அதிகாரியின் தலைமையில் இன்றைய நாள் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.
இன்றைய நாள் தரவுகளின்படி தற்போதைய நிலையில் 126 மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மீட்கப்படாத அடையாளப்படுத்தப்பட்டுள்ள. மனித எச்சங்களை அகழ்வு செய்யும் பணி இடம் பெற்று வருவதாக அறிய முடிகின்றது. அத்துடன் குறித்த புதைகுழி பகுதியானது மழை மற்றும் வேகமான காற்று காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு பகுதி மூடப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4.00 மணியளவில் மன்னார் நீதிமன்றத்தில் நீதிபதி த.சரவணரஜா தலைமையில் புதை குழி தொடர்பான கலந்துரையாடல் ஓன்று இடம் பெறவுள்ளது குறிப்பிடதக்கது.