கம்பளை பிரபல சிங்கள பாடசாலையில் கற்கும் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் குறித்த சிறுமியின் தந்தை என கூறப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் பல இடங்களிலும் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் தொடர்ந்தும் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது.
பெண்கள் மட்டுமன்றி சிறுமிகளும் வன்புணர்விற்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக தொடர்ந்தும் நாட்டில் ஆர்ப்பாட்டங்களையும், கண்டன பேரணிகளையும் மாதர் சங்கங்களும், இளைஞர் யுவதிகளும் முன்னெடுக்கின்றனர்.
இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கம்பளை பொலிஸார், அவசர கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.