பாறுக் ஷிஹான் காரைதீவு பிரதேசத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27)  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்   பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா  தலைமையில் பிரதேச செயலாளர்  நெறிப்படுத்தலின்  ஆரம்பமானது. இதன் போது  பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை,  அஷ்ரப் தாஹிர்,  க. கோடீஸ்வரன், மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தங்களது ஆக்க...
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் நாட்டின் கௌரவ பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி. ஹரினி அமரசூரிய அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று  பிரதமர் காரியாலயத்தில் நடைபெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச் செயலாளர், உதவிப் பொதுச் செயலாளர், உப குழுக்களின் செயலாளர்கள், உறுப்பினர்கள் சிலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். குறித்த சந்திப்பில்,...
  எஸ்.எம்.முபீன், அபு அலா கடந்த சில நாட்களாக திருகோணமலை மாவட்டத்தில் தொடராக பெய்து வந்த அடைமழை காரணமாக நிலாவளி கடற்கரையோரங்களில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இளைப்பாறும் இடங்கள் சேதமடைந்து காணப்பட்டன. இதனை மாற்றியமைக்கும் "கிளீன் சிறிலங்கா" பணிகள் மற்றும் கடற்கரை ஓரங்களை துப்பரவு செய்யும் சிரமதானம் இன்று (25) முன்னெடுக்கப்பட்டது. வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மிக அதிகமாக விரும்பி வருகின்ற இடமாக திருகோணமலை -...
  யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் நாடாளுமன்றத்தில் சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக உரையாற்றியிருக்கிறார். கட்சியின் உள் முரண்பாடு நாடாளுமன்றத்திலும் பிரதிபலித்திருக்கின்றது. ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வைத்து முறைப்பாடு செய்வது அநேகமாக இதுதான் முதல் தடவையோ தெரியவில்லை. விமான நிலையத்தில் சிறீதரன் சிறிது நேரம் மறித்து வைக்கப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும். அதேசமயம் அது தொடர்பாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்கு...
நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை கல்வி வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான கமு/சது/ அல்-ஹிரா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் எம்.ஆர். அப்துல் பாஸித் 152 புள்ளிகளைப் பெற்று சித்தி எய்தியுள்ளார். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் மேலும் வழிப்படுத்திய அதிபர் ஏ.எல் சனூஸ் மற்றும் தரம் 5 வகுப்பாசிரியர் ரி. விஜயதாஸ் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும்...
  அதிர்ஷ்ட லாப சீட்டெடுப்பின் மூலம் நாடாளுமன்றம் சென்ற விமல் ரத்நாயக அமைச்சர் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்களை விமர்சிப்பதற்கு காரணம் தான் என்ன. ரஊப் ஹக்கீம் இல்லாத முஸ்லிம் சமூகத்தை இழுவை மாடுகளாக மேய்ப்பதற்கு திரை மறைவில் திட்டங்கள் வகுத்தனர். அதற்காக அவர்கள் மேற்கொண்ட சகல சதிகளையும் இறைவன் சுக்கு நூறாக்கியதுடன் அவர்களுடைய கனவு சாம்ராஜ்ஜியத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தான். இதைத் தாங்கிக் கொள்ளாத இன்றைய...
வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்தொடர்பில் ஆராய்ந்து, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தகவல் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 24.01.2025இன்று வடமாகாண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பதினொரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகளுக்கும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் இக் கலந்துரையாடலிலேயே இவ்வாறு குழு ஒன்றை அமைப்பதென்ற தீர்மானம்...
  மதுபானசாலைகளுக்கு சட்டரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும். ஏனெனில், அது சட்டரீதியான ஆவணமாகும்’’ என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். தேர்தலுக்கு முன் இப்படித்தான் கூறினார்கள் என இதற்கும் ரைட்டப் எழுதும் எண்ணம் இருப்பவர்கள் முன்வரவும்.. பார் லைசன்ஸ் எல்லாம் கேன்சல் ஆகும் என கூறிய நபர்கள் & இதனை அரசியலாக்கியவர்களின் நிலை
  இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்குவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்க முன்னுரிமை திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் ஏனைய தேவையான உதவிகள் மற்றும் "Clean Sri Lanka" திட்டத்திற்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடக்கு அபிவிருத்தி, தேசிய ஒற்றுமை மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கும்...
  பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் மேற்கொள்ளும்போது உரிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், ஒவ்வொரு அழகக நிலையத்தினருக்கும் அந்தப் பொறுப்பு உள்ளதாகச் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், வடக்கு மாகாண அழகக சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாண அழகக சங்கத்தினரால் பல்வேறு விடயங்கள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டன. குறிப்பாக ஒரு சில அழகக நிலையங்கள் கட்டுப்பாடுகளை மீறிச்...