2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இந்த ஆண்டுக்குரிய திட்டங்கள் அனைத்தும் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்பட வேண்டும் என மீளவும் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன் கிழமை காலை (22.01.2025) இடம்பெற்றது....
  பாறுக் ஷிஹான் கிட்டங்கி வீதி அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல் பின்பற்றி  செல்வதை அவதானிக்க முடிகின்றது. கல்முனை மாநகரையும் நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாய்வதால் இன்று (21) போக்குவரத்து கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம்  பாய்வதுடன் கல்முனை சேனைக்குடியிருப்பு  நாவிதன்வெளி சவளக்கடை...
  நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான சிறந்த வழியை தீர்மானிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.   நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் அரச தனியார் பங்காளித்துவம் உள்ளிட்ட அனைத்து உத்திகளும் ஆராயப்படும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
  டிரம்ப் உரையில் இடம் பெற்ற 5 முக்கிய விஷயங்கள்   புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு அவர் அதிபராக பதவியேற்றார். டிரம்பின் பதவியேற்பு விழாவில் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், அமெரிக்க முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் "எதிர்காலம்" எப்படி இருக்கும் என்பதை...
  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் எனதெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே தனக்கு உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது பாதுகாப்பிற்காக அதனை வழங்கினார்கள் அரசமைப்பின் கீழ் எனக்குஅதற்கான உரிமையுள்ளது என...
  யாழ்பபாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் - ஈழத் தமிழர்களின் கலாசார பாரம்பரியங்களை பேணிப் பாதுகாத்து வளர்ப்பதனை நோக்கமாக கொண்டு இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்தக் கலாசார மையம் தமிழ் மக்களின் அடையாளமாக தற்போது காணப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு...
  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன மக்கள் குடியரசிற்கான உத்தியோக பூர்வ விஜயம் நிறைவுற்றது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன மக்கள் குடியரசிற்கான உத்தியோக பூர்வ விஜயம் நிறைவுற்றது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2025 ஜனவரி 14 முதல் 17 வரையிலான சீன மக்கள் குடியரசிற்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாரம்பரிய...
    (பாறுக் ஷிஹான்) நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான   திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில்   திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் குறித்த சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில்  இன்று(19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து...
  நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பட்டினைத் தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையை அறிய சாய்ந்தமருதின் உணவு கையாளும் சில நிறுவனங்கள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களின் வழிகாட்டலில் இன்று சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.எம். நிஸ்தார் அவர்களால் பரிசீலனை செய்யப்பட்டு சுகாதார சீர்கேடான உணவங்களுக்கு எச்சரிக்கையும், அறிவுறுத்தலும் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதம்...
  நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடையும் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும் சனிக்கிழமை (18) சம்மாந்துறை தனியார் நிறுவனமொன்றில் இடம்பெற்றது. மலேரியா தடுப்பு இயக்க பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம்.கபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்கள் பிரதம அதிதியாகவும், பிராந்திய கண்காணிப்பு...