தொலைக்காட்சியில் முதன் முதலாக தோன்றும் பிரித்தானிய இளவரசி

301
பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் பற்றிய ஆவணப்படம் ஒன்றில் பங்கேற்க இளவரசியான கேட் மிடில்டன் முதன் முதலாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உரையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் எதிர்வரும் ஏப்ரல் 21ம் திகதி தனது 90-வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட உள்ளார்.

இந்த பிறந்த நாள் தினத்தில் பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று மகாராணியின் வாழ்க்கை வரலாறு, முக்கிய பணிகள் குறித்து விவரிக்கும் வகையில் ஆவணப்படம் ஒன்றை வெளியிடவுள்ளது.

இதில் மகாராணியும் கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தற்போது கூடுதலான தகவல்களும் வெளியாகியுள்ளது.

அதாவது, மகாராணியை பற்றி உரையாட இளவரசி கேட் மிடில்டன்னும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற உள்ளதாகவும், இதற்கு மகாராணி ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

கடந்த 2010ம் ஆண்டு இளவரசர் வில்லியமுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றபோது தான் கடைசியாக தொலைக்காட்சியில் கேட் மிடில்டன் தோன்றினார். இதற்கு பிறகு, அதிகாரப்பூர்வமாக எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளவில்லை.

இதுமட்டுமில்லாமல், இளவரசர் வில்லியமை திருமணம் செய்த பிறகு அவருக்கு ஒரு நல்ல மனைவியாகவும், அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தாயாராகவும் பொறுப்புடன் செயல்பட்டு வருவதாக கேட் மிடில்டன்னை மகாராணி பாராட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அரச குடும்பத்தின் விதிமுறைகளை கவனத்துடன் பின்பற்றி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே நற்பெயரை கேட் மிடில்டன் பெற்றுள்ளதால், தன்னைப் பற்றிய ஆவணப்படத்தில் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் பிரித்தானியாவில் வெளியாகும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

SHARE