
களவு சம்பவத்தின் போது சிசிரிவியில் பதிவான காட்சிகளை ஆதரமாக வைத்துக்கொண்டு கிளிநொச்சி பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, இரண்டு சந்தேக நபர்களும் கைத செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (16-12-2018) அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்திற்கு கீழ் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்தொலைப்பேசி 43, சாச்சர்கள் 10, கடையின் கதவை உடைப்பதற்கு பயன்டுத்தப்பட்ட அலவாங்கு என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை நீதி மன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் கிளிநொச்சி பொலீஸார் தெரிவித்துள்ளார்.