தொழுகைக்காக பள்ளிக்கு சென்று திரும்பிய இருவர் விபத்திற்குள்ளாகி மரணம்

199

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தொழுகைக்காக பள்ளிக்கு சென்று திரும்பிய இருவர் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று தெஹிவளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் மோட்டார்சைக்கிளில் தொழுகைக்காக பள்ளிக்கு சென்று திரும்பும்போதே விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் தெஹிவளை வைத்ய வீதி பிரதேசத்தை சேர்ந்த இன்சாப் இப்ராஹீம் (21 வயது) மற்றும் சுதர்சன ரோட் பிரதேசத்தை சேர்ந்த யூஸப் (13 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

SHARE