தோங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்

289

ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை கோரி கெலிவத்தைதோட்ட தொழிலாளர்கள் தேங்காய் உடைத்து 01.10.2016 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆறாவது நாளாகவும்  நாவலபிட்டி தலவாகலை பிரதானபதையின் பத்தனை சந்தியிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மலையக அரசியல்வாதிகளே  எம்மை ஏமாற்றாதீர்கள் வாக்குறுதியளித்தவாறு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எமது உரிமையை நாமே வென்றெடுப்போம் எனவும்  அட்டை கடியில் வியர்வையை சிந்தி உழைக்கும் எமக்கு தோட்ட கம்பனிகளே சம்பளத்தை அதிகரி என கோசமிட்டனர்.  தோட்ட ஆலய முன்றலில் சிதறு தேங்காய் உடைத்து தப்பு  அடித்தவண்ணம் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்:- மு.இராமசந்திரன்

unnamed-1 unnamed-2 unnamed-3 unnamed-4

SHARE