புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் விரைவில் தங்களது பிரதேசத்திற்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக நோர்வூட் மேல்பிரிவு தோட்ட மூன்று லயத்து மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்த தோட்டத்தின் மூன்று லயத்து மக்கள் இதுவரை காலமும் எந்தவித அபிவிருத்தியும் தங்களது பிரதேசத்திற்கு கிட்டாததால் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் இவர்கள் தெரிவித்த கருத்துகளை தங்களது பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் தங்களது உருக்கமான கோரிக்கையினையும் முன்வைத்திருக்கின்றா்கள்
கிட்டத்தட்ட உடைந்து விழக்கூடிய நிலையிலுள்ள பழைய லயன் காம்பராக்களி்ல் இன்னும் எத்தனை காலம்தான் வாழ்வது அந்தளவிற்கு சுவர்களும் கூரைகளும் தகரங்களும் சேதமடைந்துள்ளன பிள்ளைகள் தனியாக இருக்கின்ற வேளைகளில் இடிந்து விழுந்தால் எங்களது பிள்ளைகளை பறிகொடுக்க வேண்டிய நிலையேற்படும் மூன்று லயத்தின் முப்பது காம்பராக்களிலும் முப்பத்தைந்து குடும்பங்களை சேர்ந்த 94 பேர் வசித்து வருகின்றோம் முக்கால்வாசி வீடுகளுக்கு மின்சாரம் இல்லை தண்ணீர் குழாய் வசதிகள் ஒழுங்கில்லை பாதை வசதிகள் எல்லா இடங்களிலும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் நாங்கள் நாளாந்தம் பாவிக்கின்ற 300 அடி நீளமான பாதை இன்னும் அபிவிருத்தி காணாமல் பரிதாப நிலையில் இருக்கின்றது
இந்த தோட்டத்தில் வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்கு வீடு இல்லை ஆனால் நிர்வாகத்தினர் பாவிப்பதாக கூறிக்கொண்டு ஒரு லயன் அறை காம்ராக்கள் நீண்ட காலமாக பூட்டிக்கிடக்கின்றன
இவ்வாறு பூட்டிக்கிடக்கின்ற வீடுகளையாவது தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு நிர்வாகத்தினர் உடன்படுகின்றார்கள் இல்லை இதன் காரணத்தால் சில தொழிலாளர்கள் தற்காலிக குடிசை அமைத்து அதில் நிரந்தரமாகவே வாழ்ந்து வருகின்றார்கள் சில குடிசைகளில் இரண்டு குடும்பங்களும் வாழ்ந்து வருகின்ற இக்கட்டான நிலையும் தொடர்கின்றது
இவ்வாறு நாளாந்தம் பலவழிகளிலும் சிரமங்களை நாங்கள் அனுபவித்து வருகின்றோம் எங்களோடு இ்ந்த சின்னஞ்சிறுசுகளும் துன்பத்தில் வாழ்வை கழிப்பதை நாங்கள் தொடர்ந்தும் விரும்பில்லை ஆகையால் சம்ந்தபடட அதிகாரிகளும் எமது அமைச்சர்களும் எங்கள் அவலவாழ்வை வந்து பார்வையிட்டு எங்களின் இந்த நிலையை மாற்றிக் கொள்வதற்கு உதவிட வேண்டுமென உருக்கமாக வேண்டுகோளையும் முன்வைத்து வருகின்றார்கள்