தோட்டாக்கு அஞ்சாது நீதி எனும் வாசகம் தாங்கி மட்டுவில் சட்டத்தரணிகள் போராட்டம்

182

“தோட்டாக்கு அஞ்சாது நீதி” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கி நீதிபதி இளஞ்செழினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் சட்டத்தரணிகளால் இன்று போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டத்திலும் பணி பகிஸ்கரிப்பிலும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற கட்டட தொகுதியில் உள்ள நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் கடமையாற்றும் சட்டத்தரணிகள் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினால் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் அனைத்து சட்டத்தரணிகளும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அத்துடன், நீதித்துறை மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம் என நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் வலியுறுத்தியிருந்தனர்.

 

 

 

 

SHARE