நச்சுத் திரவத்தை அருந்திய பொலிஸ் உத்தியோகத்தர் பலி

229

குடிதண்ணீர் என பினாயில் குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தார்.

இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (12) இரவு யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் விருந்து வைத்தனர்.

அதில் மது அருந்திய பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர், குடிதண்ணீர் என நினைத்து மலசல கூடத்தை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் பினாயிலை குடித்துள்ளார்.

இதனை அறிந்த சக உத்தியோகத்தர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

SHARE