தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 2வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது.
இதில் 4வது நாள் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் பவுமாவின் பிடியை விக்கெட் கீப்பர் நழுவ விட்டதால் ஏமாற்றத்தில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஆடுகளத்தை காலால் உதைத்தார். இதை பார்த்த நடுவர் அலீம் தர், இங்கிலாந்து அணித்தலைவர் குக்கை அழைத்து பிராட் ஆடுகளத்தை சேதப்படுத்தியதற்காக எச்சரித்தார். இதனால் கோபமடைந்த பிராட், ’உன் வேலையை பாரு, நடந்தது நடந்து விட்டது’ என்று நடுவரை வசை பாட தொடங்கினார். இது தொடர்பான விசாரணையில், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக பிராட்க்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதத்தை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அபராதமாக விதித்துள்ளது. |