நடைபாதையில் கிடந்த துண்டிக்கப்பட்ட மனித தலை

271
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடைபாதை ஒன்றில் துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆம்ஸ்டர்டாமின் முக்கிய நகரில் அமைந்துள்ள தேநீர் விடுதி ஒன்றின் முன்பாக துண்டிக்கப்பட்ட தலை அடங்கிய இந்த பெட்டியை கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் முதலில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், நேற்று நெருப்பு வைக்கப்பட்ட வாகனத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தலையற்ற உடலுக்கும், இந்த தலைக்கும் தொடர்பு உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

தேநீர் விடுதிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பெட்டியில், துண்டிக்கப்பட்ட தலை அந்த விடுதியின் ஜன்னலை நோக்கி திருப்பி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்ட உடலானது 23 வயதான நபில் அம்சேப் எனவும், பொலிசாரால் தேடப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

சமீபகாலமாக போதை மருந்து கடத்தல் கும்பல்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளை அதிக அளவில் ஆம்ஸ்டர்டாம் சந்தித்துவருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கி போதை மருந்து கும்பல்களால் இதுவரை 16 கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE