நந்தினியின் பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து உள்ளே கையை நுழைத்து வயிற்றில் இருந்த சிசுவை வெளியே எடுத்து, அதை நந்தினியின் துப்பட்டாவில் சுற்றி எரித்துள்ளனர்.

269

 

மணிகண்டனுடைய அட்டூழியங்கள் அந்த பகுதியில் பிரபலமானவை.
இந்து முன்னணி நிர்வாகியான இவன் பொது இடத்தில் வன்முறை செய்வதில் தொடங்கி அனைத்து வகையான அத்துமீறல்களையும் செய்யக்கூடியவன்.
பொதுக்கூடங்களில் புகுந்து கலவரம் செய்த வழக்கெல்லாம் இவன் மீது உண்டு.
இந்நிலையில் நந்தினியை உடல்தேவைக்காக மட்டுமே பயன்படுத்த நினைத்த இவன், கருத்தரித்ததை வைத்து திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய அவள் பிரச்சனையை அவனது பாணியிலேயே முடிக்க விரும்பினான்.
கடந்த டிசம்பர் 29 ஆம் தேதியன்று பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராஜசேகரை சந்தித்து பேசி ஆலோசனை செய்தபின்பே நந்தினியை இவன் நன்பர்களோடு சேர்ந்துப்படி கடத்திச் சென்றதாக நந்தினி தரப்பில் அனைவரும் உறுதியாக கூறுகின்றனர்.

கடத்தப்பட்ட நந்தினியை மறைவிடத்தில் அடைத்து வைத்த மணிகண்டன் அவனது நன்பர்களான கீழமாளிகை திருமுருகன் (த/பெ அறிவழகன்), அயன்தத்தனூர் வெற்றிச் செல்வன் (த/பெ சீனிவாசன் ), மணிவண்ணன் (த/பெ செல்வராஜ்) ஆகியோருடன் நால்வராக இணைந்து நான்கு நாட்கள் கூட்டு வன்புணர்ச்சி செய்துள்ளனர். அதன் பின்னர் நடந்தது கொடுமைகளின் உச்சம்.. நந்தினியின் பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து உள்ளே கையை நுழைத்து வயிற்றில் இருந்த சிசுவை வெளியே எடுத்து, அதை நந்தினியின் துப்பட்டாவில் சுற்றி எரித்துள்ளனர்.
பின்னர் நிர்வாணமான நிலையிலேயே கொடுமை தாளாமல் இறந்துபோ

SHARE