நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆற்றப்பட்ட ஒரேயொரு சேவை பழிவாங்குதல் மட்டுமேயாகும் – மஹிந்த ராஜபக்ச

144

நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆற்றப்பட்ட ஒரேயொரு சேவை பழிவாங்குதல் மட்டுமேயாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் செய்த ஒரேயொரு சேவை எது என கேள்வி எழுப்பினால், அதற்கு பதிலாக பழிவாங்குதல் என்பது மட்டுமே விடையாக வரும்.அரசாங்கம் தொடர்ச்சியாக பழிவாங்குதல்களில் ஈடுபட்டுள்ளது. அரசாங்கத்தின் மெய் முகத்தை மக்கள் தற்பொழுது புரிந்து கொண்டுள்ளனர்.

அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய காலம் முதல் எங்களை பழிவாங்கி வந்தது. மக்களின் அவதானத்தை வேறும் திசைகளில் திருப்பி விடுவதன் மூலம் வாழ்க்கை செலவு குறித்த சர்ச்சைகள் மறந்து போய்விடும் என அரசாங்கம் கருதுகின்றது. எனினும் மக்கள் முட்டாள்கள் கிடையாது.

மக்களின் பணத்தை கொள்ளையிட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை அரசாங்கம் மறந்து விட்டது. அந்த மனிதர் இன்னமும் வெளிநாட்டில் சுதந்திரமாக இருக்கின்றார் என மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

SHARE