இலங்கையின் 65வது சுதந்திரதின விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள்
இலங்கை அந்நிய சக்திகளின் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும்,
இனங்களுக்கிடையேயான தேசிய நல்லிணக்கத்தின் மூலமும் அபிவிருத்தியின் மூலமுமே
வெற்றிகொள்ள முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சம உரிமைகளுடனும்,
ஐக்கியத்துடனும் வாழ்வதாகவும், தாம் நாட்டைப் பிரிக்கும் சதிகளுக்கு இடமளிக்கப்
போவதில்லையெனவும் தெரிவித்திருந்தார்.
ஒரு நாட்டின் அதிபரின் சுதந்திரதின உரையென்பது அந்த நாட்டின் செல்வழிப்
பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஆனால், இலங்கை
ஜனாதிபதி அவர்களின் உரை தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும், உண்மையிலிருந்து
வெகு தொலைவில் நிற்பதாகவும் உள்ளது என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க
முடியாது.
இலங்கை அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்தில் உள்ள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் ஒரு விழாவில் பேசும் போது ‘‘தமிழ் தேசியக் கூட்டமைப்பின உரிமை, உரிமை எனக்
கூச்சலிட்டுக் கொண்டு, இருப்பதையும் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறாகள்’’ எனத்
தெரிவித்தார்.
இருப்பவற்றையும் பறிகொடுக்கிறாகள் என்பதன் மூலம் இருப்பவையும்
பறிக்கப்படுகின்றன என்ற உண்மையை அவர் ஒப்புக் கொள்கிறார். இருப்பவற்றைப் பறிக்கும்
அரசாங்கத்தில் அவரும் ஒரு பங்காளி என்பதும், அப்படியாயின் 18வது திருத்தச் சட்டம்,
‘திவிநெகும’ சட்டம் என்பதற்கு ஆதரவு வழங்கி பறிப்பவர்களுக்கு கரம் கொடுத்தவர் அவர்
என்பதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.
ஆனால், ஜனாதிபதி இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சம உரிமையுடன்
வாழ்கின்றனர் என்ற கூற்றை அவ தமிழ் மக்கள் இருப்பவற்றைப் பறிகொடுக்கிறார்கள் என்பதை
ஒப்புக் கொண்டதன் மூலம் மறுதலித்துள்ளார் என்பதுதான் உண்மை.
தேசிய நல்லிணக்கத்தின் மூலமும் ஸ்திரமான அபிவிருத்தி மூலமுமே அந்நிய
சக்திகளின் சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால், ஜனாதிபதி தலைமை வகிக்கும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தேசிய
நல்லிணக்கத்திற்கு விரோதமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளே அந்நிய சக்திகளின்
தலையீட்டுக்கான கதவுகளைத் திறந்து விடுகின்றன என்பதை மறுத்து விட முடியுமா?
இலங்கை அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒரு புறம் தமிழ் மக்களின்
அடிப்படை உரிமைகளைப் பறிப்பனவாகவும், இன்னொரு புறம் சாதாரண இயல்பு வாழ்வைக் கூடப்
பறிப்பனவாகவும் அமையும் போது நாட்டில் தேசிய நல்லிணக்கம் எவ்வாறு உருவாக முடியும்?
ஜனாதிபதியின் பேச்சு காற்றில் கரைந்து போகுமுன்பே வலிகாமம் வடக்கில் உள்ள
தமிழ் மக்களின் வீடுகள் படையினரால் இடித்து அழிக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் பல
ஆயிரம் ஹெட்டே காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு முட்கம்பி வேலியிடப்பட்டுள்ளன.
இது பற்றிக் கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாள வணகுலசூரிய இலங்கையில்
எங்குமே உயபாதுகாப்பு வலயம் இல்லையெனவும், 2000 ஹெக்டே காணியில் மட்டும் வடக்கில்
படைமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு
அரசாங்கத்திற்குக் காணி தேவைப்பட்டால் முறைப்படி கையகப்படுத்தப்படும் எனவும்
தெரிவித்தார். மேலும் அவர் படையினரால் எந்த ஒரு வீடும் அழிக்கப்படவில்லை எனவும்
தெரிவித்தார்.
ஒரு புறம் உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டு, மறுபுறம் தமிழ் மக்களின் காணிகளை
அபகரித்தும், வீடுகளை இடித்தும் வெறியாட்டம் போடும் போது தேசிய நல்லிணக்கம் உருவாக
முடியுமா?
இத்தகைய அத்துமீறல்களை வெளிக்கொண்டுவரும் ஊடகங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன.
உதயன் பத்திரிகை அலுவலகம் பல முறை தாக்கப்பட்டதும், பல பணியாளகள் கொல்லப்பட்டதும்,
பிரதம ஆசிரியர், செய்தி ஆசிரியர் உட்படப் பல பணியாளர்கள் மேல் கொலை முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டமையும் இங்கு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறையைத்
தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளன.
கொலை, கொலை முயற்சி, தாக்குதல், தீயிடல் எனப் பலவித வன்முறைகள் ஊடகங்கள் மீது
நடத்தப்பட்ட போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவுமில்லை தண்டிக்கப்படவுமில்லை.
எங்கும் பரவலாகப் படை முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தும், பொலிசாருக்கு அதிகாரங்கள்
வழங்கப்பட்டிருந்தும் ஏன் இத்தகைய வன்முறைகள் தடுக்கப்படவில்லை? ஏன்
சம்பந்தப்பட்டவகள் கண்டு பிடித்துத் தண்டிக்கப்படவில்லை? இப்படியாக தமிழ் மக்கள்
மீதான ஒடுக்குமுறைகள் தொடரப்படுவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும்
சக்திகள் எவை? அவகளுக்கு பின்னணியில் நிற்பவர்கள் யார்? இன்று வடமாகாணசபையின்
ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வடபகுதியின் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர்
ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க என வடமாகாணத்தின் ஒவ்வொரு முனையிலும் தங்கள் அதிகாரக்
கரங்களை விரித்திருக்கும் இவர்களே, இக் கேள்விகளுக்குப் பதில் வழங்கும்
கடப்பாடுடையவர்கள்.
இவர்கள் வடக்கில் இராணுவ மயப்படுத்தப்பட்ட ஒரு சிவில் நிவாகத்தையே
நடைமுறைப்படுத்தி வருகின்றன. அவர்கள் அனைவரும் தங்கள் கட்டளைகளுக்குக்
கீழ்ப்படியும் சிப்பாய்களாகவே அரச அதிகாரிகளையும், அரச பணியாளகளையும்
கையாள்கின்றனர். இதனால் இன்று வடக்கில் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோ, பிரதேசசபைகளின்
தலைவர்களோ, உறுப்பினர்களோ பொருட்படுத்தப்படுவதில்லை. அபிவிருத்தி தொடபாக அவர்களால்
முன்வைக்கப்படும் திட்டங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. தான்தோன்றித்தனமான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் மக்கள் பிரதிநிதிகள் எப்படி
அபிவிருத்தியில் பங்கு கொள்ள முடியும்?
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி அவகளுடன் ஒட்டியிருக்கும் இளம்
செயலாளரின் செயற்பாடுகள் இராணுவ சர்வாதிகாரிகளின் வேலை முறை போல் அமைந்திருப்பதாகப்
பல முனைகளிலும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆளுநரைத் திருப்திப்படுத்தும் வகையிலும் ஈ.பி.டி.பி.தலைமையகத்திலிருந்து
வரும் கட்டளைகளுக்கு அமையவுமே அவரின் செயற்பாடுகள் தொடவதாகவும் கருத்துகள் பலமாக
நிலவி வருகின்றன. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
மதிப்பளிக்கும் பண்புகூடத் தெரியாதவர் இந்த இளம் செயலாளர்.
இதன் காரணமாகப் பல அரச அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறைப்படி செய்ய முடியாமல்
திணறுகின்றன. சில நெருக்குதல்களுக்கு அடிபணிவதா அல்லது சட்டப்படி வேலை செய்வதா
என்று முடிவெடுக்க முடியாத நிலையில் தடுமாறுகின்றன.
இத்தகைய நிலையில் சில அதிகாரிகள் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டன. இன்னும் சில
இடமாற்றம் பெற்றுச் சென்று விட்டன. தொலை தூரங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டால்
பிள்ளைகளின் கல்வி போன்ற விடயங்களுக்கு இடையூறு ஏற்படலாம் என்ற அச்சத்தில் பல
அதிகாரிகள் மனம் புழுங்கியவாறே சொல்பவற்றைச் செய்து வருகின்றனர்.
அபிவிருத்தி தொடபான கூட்டங்கள், கலந்துரையாடல்கள் போன்றவற்றுக்குக் கூட
அழைக்கப்படுபவர்களின் பட்டியல் ஈ.பி.டி.பி தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு
அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சில
அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அடிப்படையில் பொது நிர்வாக சேவை அதிகாரிகளோ, பணியாளகளோ, அரச அதிபருக்குக்
கட்டுப்பட்டவர்கள். அரச அதிபரை விட வேறு எவரும் அவகளுக்குக் கட்டளையிட முடியாது.
ஆனால், இன்று அரச அதிகாரிகள் பல முனைகளில் நெருக்குதல்களுக்கு உட்படுத்தப்படுகின்றன.
நேமையாகவும் துணிவுடனும் பணியாற்றும் சில உதவி அரசாங்க அதிபர்கள் பலவித
நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசசபைகள்
கூட சரியாகச் செயற்பட முடியவில்லை. அவர்களின் வேலைத்திட்டங்களுக்குப் பிரதேசசபை
செயலகளால் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.
இன்று ஆளுநரையும், சில அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்தும் முகமாக முறை
மீறல்களில் ஈடுபடும் எந்த ஒரு அதிகாரியும் நாளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட
பிரதிநிதிகள் கையில் ஆட்சி அதிகாரம் வரும்போது பதில் சொல்லியாக வேண்டிய நிலை
ஏற்படும் எனத் தெரிவிக்க விரும்புகிறோம். இப்படியான ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட
நிர்வாகம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுவதை அனுமதிக்கும் ஜனாதிபதி, தமிழ் மக்கள்
சம உரிமையுடன் வாழ்வாதாக எப்படிக் கூற முடியும்?
வடக்கின் இயல்பு வாழ்வைச் சீர்குலைப்பதில் இன்னுமொரு முக்கிய பாத்திரம்
வகிப்பவ வடபகுதியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க. இவரது
அதிகாரத்தில் பாடசாலை விழாக்கள் உட்பட இங்கு நடைபெறும் ஒவ்வொரு வைபவத்திலும்
இராணுவப் பிரசன்னம் எழுதப்படாத சட்டமாக்கப்பட்டுள்ளது.
இவரின் அதிகாரத்திலேயே எவ்வித சட்ட வரைமுறையுமின்றி வலி.வடக்கு மக்களின்
காணிகள் படையினரால் கையகப்படுத்தப்படுகின்றன. மக்களின் பெறுமதி மிக்க வீடுகள்
இடிக்கப்பட்டு வீதிகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், இராணுவப் பேச்சாளரோ அப்படி
எதுவும் நடக்கவில்லை என சளாப்புகிறார். அது மட்டுமின்றிப் பல இடங்களில்
பொதுமக்களின் காணிகளைத் தமக்குக் கையளிக்கும்படி படையினர் பிரதேச செயலகளை
வற்புறுத்தி வருகின்றன.
குறிப்பாக பல்கலைக் கழக மாணவர்கள் மாவீரர் அஞ்சலி மேற்கொள்ள எடுத்த
முயற்சிகள் தொடர்பாகவும், அவர்களின் கைதுகள், விடுதலை தொடர்பாகவும் இவர் ஒரு சிவில்
அதிகாரி போன்று கருத்துகளை வெளியிட்டார். அது மட்டுமின்றி பல்கலைக் கழக மாணவர்கள்
பிரச்சினையில் அரசியல்வாதிகள் தலையீடு செய்வதாகக் கண்டனமும் வெளியிட்டார்.
நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். எமக்கெனச் சில
சிறப்புரிமைகள் உண்டு. எமது மக்களுக்கு எங்கு பிரச்சினை என்றாலும் அங்கு நாம் நிற்க
வேண்டியது எமது கடமை. எம்மை விமர்சிக்க எந்த ஒரு அரச பணியாளர்களுக்கும் அதிகாரம்
கிடையாது என்பதைத் திட்ட வட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கை இராணுவம் பாதுகாப்புப்படை என்ற வகையில் மக்களைப் பாதுகாக்கும் முகமாக,
இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்படும் மர்மக் கொலைகள், தாக்குதல்கள்,
ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் போன்றவற்றைத் தடுத்து
நிறுத்தவும் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டு பிடிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டால் அதனை
வரவேற்க முடியும்.
அரச இயந்திரமும், அரச அதிகாரிகளும், அரச படையினரும், அரசுடன் இணைந்துள்ள
அரசியல்வாதிகளும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு
அவர்களின் நிம்மதியையும், அமைதியையும் குலைக்கும் போது, தேசிய நல்லிணக்கம் உருவாக
முடியாது என்பதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும். இப்போதைய இராணுவ நிர்வாகத்தில்
அதனையே நாம் எதிபார்க்கிறோம்.
ஈ.சரவணபவன்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு.