நல்லுார் கிட்டு பூங்காவில் நடக்கும் சீரழிவுகள்..!

219

kiddu-ponga

பாழடைந்துள்ள நல்லுார் கிட்டு நல்லூர் கிட்டு பூங்காவில் நடக்கும் சீரழிவுகள்..!! யாழ்.நல்லூர் கிட்டு பூங்காவில் நாளாந்தம் நடைபெறும் சமூகவிரோத செயல்களால் பல இன்னல்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளின் காலத்தில் இப்பூங்கா தூய்மையாக பராமரிக்கப்பட்டு வந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமது பொழுதுபோக்கினை இப்பூங்காவில் களித்தனர். ஆனால் யுத்தம் காரணமாக இப்பூங்கா கைவிடப்பட்டது.

தற்போது இப் பூங்கா பாரிய பற்றைக் காடுகளாகவும் விச ஜந்துகளின் உறைவிடமாகவும் காணப்படுகின்றது.

இப் பூங்காவில் மாலை வேளைகளில் ஒரு தொகுதி இளைஞர்கள் கூடியிருந்து மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் பெண்களுடன் மரங்களுக்கு கீழே அமர்ந்து உரையாடுவதாகவும் தெரி வித்தனர்.

எனவே இங்கு நடைபெறும் சமூகவிரோத செயல்களையும், கலாசாரப் பிறழ்வுகளையும் சம்பந்தப்பட்டவர்கள் கட்டுப்படுத்தப்பட வேன்டும் எனவும் தெரிவித்தனர்.

SHARE