நல்லூர் முருகனை வழிபட்ட ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

384

யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் வருகைதந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையா ளர் அல் ஹீசைன் வரலாற்று புகழ் மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளார்.

இன்றைய தினம் காலை 10 மணிக்கு யாழ்.வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அ ல் ஹுசைன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஆளுநர் பளிஹகக்கார ஆகியோரை சந்தித்த பின்னர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றிருந்தார்.

இதன்போது யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்ப டுத்தவேண்டும். எனக்கோரி முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். அதனையும் கண்ணுற்ற ஆணையாளர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி மகஜரை பெற்றுக் கொண்டார்.

பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர் ஆலயத்திற்குச் சென்று விசேட வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளார்.

SHARE