நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கிய மர்ம நபர்: பொதுமக்கள் உதவியை கோரும் பொலிஸ்!

294
பிரித்தானியாவின் துர்ஹாம் மாகாணத்தில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து தாக்கிவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துர்ஹாம் மாகாணத்தில் பீட்டர்லீ பகுதியில் குடியிருந்து வருபவர் 27 வயதான விக்கி போவஸ், திங்களன்று நள்ளிரவு கடந்த வேளையில் இவரது வீட்டின் கதவை யாரோ முட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வந்திருப்பது யாரென கேட்டு கதவை திறக்க முயன்ற விக்கியை அந்த நபர் கத்தியால் மின்னல் வேகத்தில் தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.

விக்கியின் முகத்தில் கத்தியால் தாக்கியதால் கன்னத்தில் காயம்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

நள்ளிரவு நேரத்தில் வீடு வரை வந்து தாக்கிவிட்டு தப்பிச்செல்லும் அளவுக்கு தமக்கு எதிரிகள் எவரும் இல்லை என கூறும் விக்கி,

நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் தம்மால் மீளமுடியவில்லை என தெரிவித்துள்ளார்.

தம்மை தாக்கிய அந்த நபரை கைது செய்ய பொதுமக்கள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர், இச்சம்பவத்தை அனைவரும் அறியச்செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரத்தகாயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள விக்கியின் தந்தை இந்த விவகாரம் குறித்து பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

சம்பந்தபட்ட நபர் குறித்து தகவல் தெரிய வரும் பொதுமக்கள் கண்டிப்பாக பொலிசாரிடம் அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் கண்டிப்பாக ஆள்மாறாட்டமாக இருக்கவே வாய்ப்பு உள்ளதாகவும், விக்கியை வீடு புகுந்து தாக்கும் அளவில் அவருக்கு எதிரிகள் எவரும் இல்லை என அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

SHARE