நாடளாவிய ரீதியில் 36,430 தாதியர்களுக்கு பற்றாக்குறை

310

நாடளாவிய ரீதியல் வைத்தியசாலைகளில் 36,430 தாதிகளுக்கான பற்றாக்குறை நிலவுவதாக அகில இலங்கை தாதிகளின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அரசாங்க வைத்தியசாலைகளில் 64,430 தாதியர் சேவையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துறை செய்துள்ள நிலையில் தற்போது இந்த வைத்தியசாலைகளில் 28,000 தாதியர்களே சேவையில் இருப்பதாக அகில் இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மூன்று தாதியர் கடமையாற்ற வேண்டிய இடத்தில் ஒரு தாதி கடமை புரிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போது உள்ள நிலமையில் ஏற்கனவே 1000 பேருக்கு தாதியர் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் இதன் எண்ணிக்கையை 5000 ஆக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் தாதியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக நாட்டில் 205 பயிற்சி பாடசாலைகள் காணப்படுவதாகவும் அதனூடாக விரைவில் அதிகப்படியான தாதியருக்கு பயிற்சியளித்து நாட்டில நிலவும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறுதாதியர் சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

download (1)

SHARE