நாட்டில் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை

311

நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க மேல் மாகாண செனட் சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

யாழிற்கு இன்று வெள்ளிக்கிழமை 6 பேர் கொண்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அந்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஜனவரியின் பின்னரான மாற்றத்தினை எவ்வாறு எதிர்பார்க்கின்றீர்கள் என அமெரிக்க மேல் செனட்சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு தான் பதிலளிக்கையில், மாற்றம் ஏற்பட்டமை நல்ல விடயம் என்று கூறியதாகவும் முதலமைச்சர் கூறினார்.

நூட்டினை முழுமையாக பார்த்தால் ஜனநாயக ரீதியில் நன்மையை தந்துள்ளது. தனிப்பட்ட வகையில், தமிழ் மக்களின் நலனுக்காக பார்த்தால் நன்மை தந்தாக தெரியவில்லை.

யுாழ்.மாவட்டத்தில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றுவது தொடர்பில் எந்தவித கருத்துக்களையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை.

இராணுவம் யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். அதேநேரம் 64 ஆயிரம் ஏக்கர் காணியில் 1000 ஏக்கரை மட்டும் மக்களுக்கு விடுத்துள்ளனர்.

ஊள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றீர்களாக என செனட் உறுப்பினர்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

அதற்கு அவர் ஆம், உள்ளகவிசாரணையினை நாங்கள் எதிர்க்கின்றோம். அனைத்து தமிழ் மக்களும் சர்வதேச விசாரணையினை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணையே வேண்டும்: முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்: குளோபல் தமிழ் செய்தியாளர்

இலங்கையில் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புத் தொடர்பில் நீதியைப் பெற உள்ளக விசாரணை எமக்குத் தேவையில்லை என்றும் சர்வதேச விசாரணையே தேவை என்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

நேற்று பிற்பகல் வட மாகாண முதலமைச்சரை அமெரிக்க  செனட் சபை உறுப்பினர்கள் ஐந்து பேர் முதலமைச்சரின் வாசல் ஸ்தலத்தில் வைத்து சந்தித்து நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

ஜனவரி 8இற்குப் பின்னர் தேசிய ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினை தொடர்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று சி.வி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர் பகுதிகள் தொடர்ந்தும் இராணுவ பிரசன்னத்துடன் காணப்படுகின்றன என்றும் மக்களின் நிலங்கள் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசு தொடர்ந்தும் அதிகாரங்களை தன்னகத்தே வைத்திருப்பதாகவும் அதனை மாகாணங்களுக்குப் பகிரவில்லை என்பதையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இவ்வாறான சூழ்நிலைகளிலேயே இனப்படுகொலை பிரேரணை கொண்டுவரப்பட்டதாகவும் சர்வதேச விசாரணையையே தாம் வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த விடயத்தில் உள்ளக விசாரணை மூலம்தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச விசாரணை மூலமே தீர்வு கிடைக்கும் என்றும் தான் உறுமியாக நம்புவதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

SHARE