நாட்டில் மீண்டும் களமிறக்கப்படும் ஆயுதப்படை!

91

 

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாட்டின் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப்படையினர் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பாக ஒவ்வொரு மாதமும் 22ஆம் திகதியன்று ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE