நாட்டில் மீளவும் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கப்படுகின்றது – அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல

222
நாட்டில் மீளவும் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கப்படுகின்றது – அரசாங்கம்

நாட்டில் மீளவும் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கப்படுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதனை தடுக்க  எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் முயற்சித்து வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தி நாட்டில் இனக் கலவரத்தை தோற்றுவிக்க இவர்கள் முயற்சிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் நாட்டில் தற்போது ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டால் மட்டுமே அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE