நாட்டை பிளவுப்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவரும் சமஷ்டி கொள்கையுடன் செயற்பட கூடியவருமான ரெஜினோல்ட் குரே போன்றவர்களின் பாரபட்சமான நியமனங்கள் நாட்டுக்கு பெரும் ஆபத்தாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு மாகாணத்தின் தனி ஈழ கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகின்றது. அதற்கு தகுந்தாற்போல நல்லாட்சி அரசாங்கத்தினால் காய் நகர்த்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
வடக்கு மாகாண ஆளுநரின் புதிய நியமனமானது முற்றிலும் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாடாகும்.
வடக்கு மாகாணத்தின் பொலிஸ் கட்டுப்பாட்டை குறைக்கவும் புலிகளின் நிலமாக மாற்றியமைக்கவும், நிலங்களை விடுவிக்கவும் முன்னாள் வடமாகாண ஆளுனர் பளிஹக்கார இருக்கும் போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான பாவ செயல்களுக்கு ஒத்துழைக்காமையினாலேயே அவரை நீக்கிவிட்டு புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆளுனர் முன்னாள் ஜனாதிபதியின் தீவிர விசுவாசியாவார். மேலும் பிரபாகரனின் தனிநாட்டு கோரிக்கையை நிலைநாட்டுவதற்கே தற்போதுள்ள மைத்திரி- ரணில் பிரதிநிதிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
குறித்த விடயம் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். நாட்டின் நல்லாட்சியை சீர்குலைக்கும் மற்றும், யுத்த காலப்பகுதியில் இரத்தம் சிந்தி காத்த எமது படைவீரர்களை காட்டிக்டிகாடுக்கும் செயற்பாடாகவே இது அமைந்துள்ளது.
நாட்டை இரண்டாக பிளவுபடுத்தி தமிழீழத்தை அடைவதற்கான நல்லாட்சி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை பளிஹக்கார முன்னெடுக்காததன் விளைவாகவே வடக்குக்கான புதிய ஆளுனர் நியமனம் இடம்பெற்றுள்ளமை தெளிவாகின்றது என்றார்.