நான்காம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிக்கு ஆசிரியர் கொடுத்த விசித்திரமான தண்டனை!

211

காலியில் பிரபலமான பாடசாலை ஒன்றில் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிக்கு அதே வகுப்பை சேர்ந்த 44 மாணவிகளை அழைத்து தலையில் கொட்டக் கூறிய ஆசிரியர் தொடர்பாக நேற்று தெரியவந்துள்ளது.

இது காலி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது.

குறித்த மாணவி செய்த சிறு தவறுக்கு இவ்வாறு தண்டனை வழங்க கூறிய அந்த ஆசிரியர், பயிற்சிக்காக வந்த அறிவியல் ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தென் மாகாண கல்வி அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களமும் இது தொடர்பாக வேறு ஒரு விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.st

SHARE